Saturday, April 23, 2016

Shimoga Cancer Cure ya Narayana Murthy’s சிமரூபா கஷாயம் - புற்று நோய்க்கு மருந்து.

http://www.revalgo.com/blog/shimoga-cancer-cure-vaidya-narayana-murthys-herbal-cancer-treatment/

Shimoga Cancer Cure

சிமரூபா கஷாயம் - புற்று நோய்க்கு மருந்து.

                       மிக உபயோகமான ஒன்று யாராவது ஒரிவருக்காவது உபயோமாகலாம். தொலைபேசி எண்ணும் தரப் பட்டுள்ளதால் குறிப்பிட்ட நபரை எளிதில் தொடர்பு கொள்ளவும் முடியுமே...  இனி படித்த விஷயம் கீழே.  
         
நீர், நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவை மாசு பட்டுள்ளதால் பல்வேறு உடல்குறைகள் ஏற்படுகின்றன. புற்று நோயின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் காசர்க்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் என்டோசஃல்பான் அதிக அளவு காணப்படுகிறது. எனவே புற்று நோய் அதிக அளவில் பரவியது. இப்போது கேரளாவில் என்டோசல்பான் தடை செய்யப் பட்டுள்ளது. தேசிய அளவிலும் இந்த விஷயத்தில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, என்டோசல்ஃபானை உற்பத்தி செய்யக் கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்ச்சி வலுத்துள்ளது.
   
             
இந்நிலையில் சிமரூபா கிளாக்கா (SIMAROUBA GLAUCA) இலைக் கஷாயத்தைத் தொடர்ந்து பருகி வந்தால் புற்று நோய் தணிகிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் சிமரூபா மரங்கள் பரவலாக உள்ளன. இதற்கு சொர்க்க விருட்சம், லக்ஷ்மிதரு என்கிற பெயர்களும் உள்ளன.
 
           
கேரளாவைச் சேர்ந்த புற்று நோயாளிகள் பலருக்கு சிமரூபா கஷாயத்தை பெங்களுருவைச் சேர்ந்த தம்பதியர் ஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி கொடுத்தனர். இருவரும் வேளாண் விஞ்ஞானிகளாகப்  பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்தக் கஷாயத்துக்காக அவர்கள் காசு பெற்றுக் கொள்வதில்லை. சேவையாகச் செய்து வருகிறார்கள்.
 
                                
'சிமரூபா வளர்ப்பது கடினமானதல்ல. இதை மிகச் சுலபமாக வளர்க்க முடியும். இந்த மரத்தை வீட்டுக் கொல்லையில் கூட வளர்க்கலாம். இந்த விருட்சம் வீட்டில் இருந்தால் அது ஆரோக்கியக் காப்பீட்டுக்குச் சமமாகும்' என்று ஷியாம் சுந்தர் ஜோஷி கூறுகிறார். அவரை 080-23335813 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிமரூபாவில் 'கோசினாய்ட்ஸ்' என்ற நுண்சத்து உள்ளது. இதுதான் புற்று நோய்க்கு எதிராகச் செயல் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. ரத்தப் புற்று நோய்க்குக் கூட இது அருமருந்தாகும். 

                
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கையை உதாரணமாகக் கொள்வதைப் போல ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம் கேரளாவில் திருவனந்தபுரம் வழுதைக்காடுப் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். புற்று நோய் முற்றிய நிலையில் வாழ்வு எப்போது முடியுமோ என்ற கவலையில் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் ஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி தம்பதியர் அளித்துவரும் சிமரூபா கஷாயத்தைப் பற்றி ராமதாசும் அவரது மனைவி ஷீலாவும் கேள்விப் பட்டனர். சிமரூபா  கஷாயத்தைத் தொடர்ந்து பருகியதையடுத்து  ராமதாசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. இப்போது அவர் ஏறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார். 

             
கீமோதெரபி மற்றும் அலோபதி மருந்துகளும் புற்று நோயின் பாதிப்பைத் தணிக்க உதவின என்ற போதிலும் சிமரூபா கஷாயத்தின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது என்று ராமதாசும் ஷீலாவும் ஒருமித்த குரலில் சொல்கின்றனர் . 

             
புற்று நோயாளிகளுக்கு சிமரூபா கஷாயம் வரப்பிரசாதம். இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு, மத்திய அமெரிக்கா. இது ஒருவகை எண்ணெய் மரம். இந்த மரத்திலிருந்து எடுக்கப் படுகின்ற உணவு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதை சமையல் எண்ணையாகப் பயன்படுத்தினால்   நோய் குணம் அடைகிறது என்று பயனாளிகள் கருதுகின்றனர். 

Monday, June 24, 2013

மரம் வளர்ப்பு சம்பந்தமாக எங்கே உதவிகள் கிடைக்கும்?

விவசாய இதழ்கள்
இங்கே உங்களுக்கு வணிக முறை மரம் வளர்ப்பு பற்றி தகவல்கள் கிடைக்கலாம்

  1. பசுமை விகடன்
  2. பூவுலகின் நண்பர்கள்
தன்னார்வ இயக்கங்கள் 
  1. பசுமைக்கரங்கள் - கோவையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ஈசா யோக மையத்தின் உதவியோடு இயங்கும் அமைப்பு
  2. நிழல்கள் - சென்னையில் இயங்கும் மரம் வளர்ப்பு இயக்கம்
  3. Chennai Social Service - சென்னையில் இயங்கும் மரம் வளர்ப்பு இயக்கம்
விவசாய, வனக் கல்லூரிகள் இங்கே உங்களுக்கு வணிக முறை மற்றும் தன்னார்வ மரம் வளர்ப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கலாம் 
  1. தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். இணையதளம்:http://www.tnau.ac.in
  2. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேட்டுப்பாளையம். Forest College and Research Institute, Mettupalayam. இணையதளம்: http://www.fcrinaip.org
  3. தமிழகத்தில் உள்ள விவசாய, வனக் கல்லூரிகளின் தொகுப்பு:http://www.tnau.ac.in/acad/colleges.html
அரசு நிறுவனங்கள் இங்கே உங்களுக்கு வணிக முறை மரம் வளர்ப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கலாம் 
  1. கோயம்புத்தூரில் உள்ளது Institute of Forest Genetics and Tree Breeding என்ற அரசு நிறுவனம். இவர்கள் மர விதைகள், மரம் வளர்ப்பு முறைகளை சொல்லி தருகிறார்கள். இணையதளம்: http://ifgtb.icfre.gov.in

குமிழ் மரம்

எஸ்.டி.சண்முகசுந்தரம்(ஜெகதீஸ்வரர் உயர்ரக நாற்றுப்பண்ணை - கொத்தமங்கலம் ) குமிழ் சாகுபடி குறித்து:

நான் 1987ம் ஆண்டில் புதுக்கோட்டையில் என்.எம்.ஆர் ஆக வேலைக்க சேர்ந்தேன். எனக்கு அங்க கருவேல மரங்களை நடவு செய்யும் வேலையை கொடுத்தார்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்ததால் என்னை மேற்பார்வையாளராக நியமனம் செய்தார்கள். வேலை செய்து கொண்டிருக்கும் போதே சமூக காடுகள் திட்ட அலுவலர் சுப்ரமணியன் என்பவரின் உதவியோடுவணிகவியர் பட்டப்படிப்பையும் தொடர்ந்தேன். கருவேல மரங்களை தொடர்ந்து மா, பலா, புளி போன்ற பழ கன்றுகளையும் நடவு செய்தோம்.

இந்த மரங்களில்லாமல் வேறு மரங்களை அதாவது விவசாயிக்கு நல்ல பலன் கொடுக்கும் மரங்களை நட சொல்ல வேண்டுமென்று முதலில் ரோஸ்வுட் மரங்களை நடவு செய்தோம். ரோஸ்வுட் மரங்கள் பலன் தர 40 முதல் 60 ஆண்டுகள் ஆகும் என்பதால் விவசாயிக்கு குறுகிய காலத்தில் பலன் கொடுக்கும் மரங்களைத் தேடிய போது குமிழ் மரத்தை தேர்ந்தெடுத்தேன்.

அதன்படி 1991ம் ஆண்டில் திண்டுகல்லில் உள்ள ஒரு நர்சரியிலிருந்து குமிழ் கன்றுகளை வாங்கி வந்து விவசாயிகளுக்கு நடவு செய்ய கொடுத்தேன். இந்த குமிழ் கன்றானது சிறியதாக இருக்கும் போது மிகவும் மென்மையாக இருக்கும். இதனால் பல விவசாயிகள் என்னிடம் சண்டைக்கு வந்தார்கள்.

வயலில் உள்ள குமிழ் கன்றுகளை எல்லாம் பிடுங்கி வீசினார்கள். ஒரு சிலர் மட்டும் அவற்றை ஏதோ நம்பிக்கையில் பராமரித்து வந்தனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. இன்று அவர்களை இந்த குமிழ் மரங்கள் லட்சாதிபதிகளாக்கி கொண்டிருக்கின்றன.



குமிழ் மரத்தின் எதிர்காலம்?


விவசாயிகள் தொடர்ச்சியாக பலன்தரும் வெள்ளாமையை விட்டுவிட்டு, மரப்பயிர்களுக்கு மாறியபின், பலவிதமான மரங்கள் வந்து போயிருக்கின்றன. அவைகளுள் இன்றும் பேசப்படு பவை குறைவுதான். அவற்றை விரல்விட்டு எண்ணி விடலாம். விவசாயிகள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த பலவிதமான மரங்களில் முதல் இடம் பெறுவது குமிழ்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

குமிழைப் பற்றி பேசாத மர விவசாயிகள் தமிழகத்தில் இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட வந்து விட்டது. ஆனால், இந்த மரத்திற்கான எதிர் காலம்... இந்த மரத்தை பயிர் செய்திருக்கும் விவசாயிகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு, குமிழ் மர வியாபாரி ஒருவரை தமிழகத்தின் மிகப் பெரிய பூச்சந்தை இருக்கும் நிலக்கோட்டையில் சந்தித்தோம். அவர் தமிழகத்தில் பல இடங்களில் இருந்து பலவித மரங்களை வாங்கும் வியாபாரி எம்.ஏ.ஜான்போஸ்கோ (அன்னை ஷா மில், அணைப்பட்டி ரோடு, நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் 624208. தொலைபேசி: 04543 233723, 98946 21486).



“குமிழ் மரத்தை தமிழகத்தில் பரவலாக விவசாயிகள் பயிர் செய்து வந்தாலும், வெட்டி விற்கக்கூடிய அளவிலான மரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, அணவயல் கைகாட்டி, தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில்தான் உள்ளன. மற்ற மரங்களை விட குமிழ் குறுகிய காலத்தில் பிரபல மடைந்ததற்கு காரணம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி, முதிர்ச்சிதான்.

அதோடு இது இழைப்பிற்கு தேக்கைவிட நன்றாக இருப்பதால் அதிகமான தச்சு வேலையாட்களும், நீண்ட ஆயுள், உறுதியோடு வெண்மையான நிறத்திலும் இருப்பதால் வேண்டிய வண்ணங்களைக் கொடுத்து நினைத்த வண்ணத் தைப் பெற முடியும் என்பதால் வீடு கட்டுவோரும் இதை தேர்வு செய்கின்றனர்.

குமிழ் மரத்தைக் கொண்டு நிலை, கதவு, ஜன்னல் போன்றவை செய்யப்படுகின்றது. பலகை எடுக்க வேண்டுமெனில் நம்நாட்டு குமிழ் 15 ஆண்டு முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவே பலகைக்கு தேவையான குமிழ் மரங்களை வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்கி றோம். இந்தக் குமிழ் மரங்கள் லேசானதா கவும், பலகை செய்ய ஏதுவானதாகவும் இருக்கிறது.



குமிழ் மரம் சாகுபடி செய்ய விரும்புவர்கள் அடர்நடவு முறையில் வைக்கலாம். ஏனெனில் குமிழ் ஆணிவேர் தாவரம். பக்க வேர்கள் மிகக்குறைவு. இம்முறையில் ஏக்கருக்கு 1000 மரங்கள் வரை வைக்கலாம். நடவு செய்து சிறப்பான முறையில் மண்ணிற்கேற்ப நீர்ப் பாசனத்தை செய்து வந்தால் 7 ஆண்டுகளில் விறகு நீங்கலாக ஒரு மரம் ஒரு டன் எடைவரும். 1 டன் மரத்தை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை கொடுத்து எடுத்துக் கொள்கிறேன். பலகை எடுக்கும் வகையில் இருந் தால் டன்னுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கக்கூட தயாராக உள்ளேன்.

மரம் வளர வளர பக்கக்கிளைகளை கவாத்து செய்து விடுவது மிகவும் முக்கியம். குமிழ் மரம் நேராகவும், அதிக எடையுடனும் வளரும். ஆண்டுக்கொருமுறை உரம் வைத்தால் இன்னும் நன்றாக வளரும். தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும், மரத்தைப் பார்த்து விலைக்கு எடுத்துக் கொள்கிறேன். மர உரிமையாளர் கிராம அலுவலரிடமிருந்து சிட்டா அடங்கள் பெற்றுக் கொடுத்துவிட்டால் மர அறுவடை முடிந்தவுடனேயே முழுப்பணத்தை யும் கொடுத்துவிடுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் குமிழ் மரத்தின் தேவை மிகவும் உயர்ந்துள்ளது. வரும் ஆண்டு களில் இன்னும் தேவை உயரும். எனவே, விவசாயிகள் குமிழ் மரத்தை தன்னம்பிக்கையோடு பயிர் செய்யலாம். விற்பனைக்கு குறைவிருக்காது. வேம்பின் தேவையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் தற்போது இருந்த வேப்பமரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டன.

எனவே எதிர்காலத்தில் வேம்பு மிகக்குறைவாகவே கிடைக்கும். ஆக தேவை அதிகரிக்கும் போது, அதன் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் வேம்பு சாகுபடியிலும் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் நிச்சயம் நல்ல வருமானம்தான்” என்கிறார் ஜான் போஸ்கோ.

                                                                                                            நன்றி "தழில்சிகரம்.கம்" 

குமிழ் சாகுபடியில் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அணவயல் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சொல்வதைக் கேட்போமா...! 

மூணு வருஷம்தான் பராமரிப்பு! 

''என்னைப் பொறுத்தவரைக்கும் குமிழ் மாதிரி குறைஞ்ச காலத்துல அதிக வருமானம் கொடுக்குற மரம் எதுவும் இல்லீங்க. 7 முதல் 10 வருஷத்துக்குள்ள ஒரு மரம் ஒரு டன் எடை வந்துடுது. இதை என் அனுபவத்துலயே உணர்ந்திருக்கேன். 10 வருஷத்துக்கு முன்ன 30 சென்ட் நிலத்துல 9 அடிக்கு 9 அடி இடைவெளியில குமிழை நடவு செஞ்சிருந்தேன். கவாத்து அடிச்சு, முறையா தண்ணி கொடுத்து பாத்துகிட்டதால மரங்க நல்லா வளந்திருக்கு. அதுல வேலியோரமா இருந்த நாலஞ்சு மரங்களை போன வருஷம் வெட்டி வித்தேன். ஒவ்வொரு மரமும் ஒன்றரை டன் எடை இருந்துச்சு. ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனதால, மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிச்ச மரங்களை இன்னும் வெட்டாம வெச்சிருக்கேன். 

இந்த மரத்துக்கு இருக்குற டிமாண்டை பாத்துட்டு ஒண்ணரை வருஷத்துக்கு முன்ன, செடிக்கு செடி 14 அடி, வரிசைக்கு வரிசை 13 அடி இடைவெளியில ரெண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கேன். இப்படி நட்டா ஏக்கருக்கு 220 கன்றுகள் வரைக்கும் தேவைப்படும். முதல் வருஷம் வரைக்கும் ஊடுபயிரா கடலை, உளுந்துனு மாறி, மாறி ஊடுபயிர் செஞ்சிக்கலாம். குமிழைப் பொறுத்தவரைக்கும் 20 அடி உசரத்துக்கு மரம் போற வரைக்கும் கவாத்து எடுக்கணும். அதுக்கு மேல தேவையில்லை. அதேபோல முதல் ரெண்டு, மூணு வருஷம் வரைக்கும் முறையா தண்ணி கொடுத்து பராமரிக்கணும். இதையெல்லாம் செஞ்சிட்டா... குமிழ்ல நல்ல மகசூலை எடுத்துடலாம். நடவு செஞ்ச 7-ம் வருஷத்துல இருந்து 10-ம் வருஷத்துக்குள்ள அறுவடை செஞ்சிடலாம். ஒரு மரத்துக்கு சராசரி விலையா 10 ஆயிரம் கிடைச்சாலும், ஒரு ஏக்கர்ல 200 மரத்துக்கு, 20 லட்ச ரூபா வருமானமா கிடைக்கும். விற்பனையிலயும் பிரச்னையில்ல. உங்ககிட்ட குமிழ் மரம் இருக்கறது தெரிஞ்சா... உள்ளூர் வியாபாரிகளே வந்து பணம் கொடுத்து வெட்டிக்கிட்டு போயிடுவாங்க. அந்தளவுக்கு இதுக்கு டிமாண்ட் இருக்கு.'' 

என்ன... அனுபவ விவசாயி ரவிச்சந்திரன் சொன்னதை மனதில் ஏற்றிக் கொண்டீர்கள்தானே! இனி, முடிவு எடுக்க வேண்டியது நீங்களேதான்! 

தொடர்புக்கு ரவிச்சந்திரன், அலைபேசி: 96551-82891.

Tharu - Maram

Sunday, February 10, 2013

வீட்டுத்தோட்டத்தில் கவனிக்க வேண்டியவை

வீட்டுத்தோட்டத்தில் கவனிக்க வேண்டியவை:

# மொட்டை மாடியில் அமைக்கும் போது நீர் போகும் வழிகளை அடைக்காமல் அமைக்கவும்.

#கைப்பிடி சுவரோடு ஒட்டி அமைத்து விடாமல் நான்கு புறமும் சென்று வர வழியோடு அமைக்கவும்.

#குறைந்த இடத்தில் அமைக்கிறோம் ,நிறைய பயிரிட வேண்டும் என அதிகம் செடிகளை நடாமல் போதுமான இடைவெளி விடவும்.அடர்த்தி அதிகம் ஆனால் செடிகளிடையே ஊட்டச்சத்துக்கு போட்டி ஏற்பட்டு எதுவுமே சரியாக வளராது.

#நீர் தேங்காமலும், பானைகள் நீருடன் திறந்து கிடக்காமலும் பார்த்துக்கொள்ளவும் ,இல்லை எனில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி டெங்கு முதல் அனைத்தும் வரும்.

#மேலும் சில பூச்சிகள்,வண்டுகள் உங்கள் வீட்டுக்கு அழையா விருந்தாளியாகவும் வரலாம் :-))

கட்டுப்படுத்த வேப்பம் எண்ணையை நீரில் கலந்து(10%) கை தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

#வீட்டு தோட்டத்தில் எறும்புகள் அதிகம் படை எடுக்கும் அதுவும் விதைப்பின் போது ,அதைப்பார்த்துவிட்டு துகளாக கிடைக்கும் எறும்பு மருந்தினை வாங்கி தூவக்கூடாது .ஏன் எனில் lindane 2-4-D என்ற ரசாயனமே எறும்பு மருந்து என விற்கப்படுகிறது. இது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

எறும்பினை கட்டுப்படுத்த கொஞ்சம் மேசை உப்பினை சுற்றிலும் கோடுபோல தூவிட்டாலே போதும்.லச்சுமணன் ரேகை போல எறும்பு கோடு தாண்டாது :-))

# தோட்டத்தில் பல்லி, சிலந்தி இருந்தால் அப்புற படுத்த வேண்டாம் அவை பயிர்களின் நண்பனே இயற்கையாக பூச்சிகளை கட்டுப்படுத்துபவை.

மேலும் மற்ற விவரங்கள் எல்லாம் கவுசல்யா அவர்களின் பதிவிலே நன்றாக விளக்கியுள்ளார்கள், அங்கு பார்க்கவும்.விடுபட்டவைகளை மட்டுமே நான் கூறியுள்ளேன் , இன்னும் ஏதேனும் விடுபட்டிருந்தாலோ சந்தேகம் என்றாலோ பின்னூட்டத்தில் சொல்லலாம்.

வீட்டு மொட்டை மாடி, பால்கனித் காய்கறி தோட்டம்



அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் லட்சுமி, ஸ்ரீராம் தம்பதி, பால்கனியில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவார்கள். இன்றைய பொழுது சிறப்பாக இருக்க உதவும், மனதிற்கு ஆறுதல் தரும் ஆலயம் இது என்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாகக் காய்கறித் தோட்டம் வளர்ப்பதில் ஊக்கமும் ஆர்வமும் உள்ள இந்தத் தம்பதி, இந்தத் தோட்டம் உளவியல் ரீதியாக மனதிற்கு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.
இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வாடகை வீட்டில், பார்ப்பவர் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தக் காய்கறித் தோட்டத்தை வளர்த்துவருகின்றனர். வாடகை வீட்டில் தோட்டம் போட முடியுமா? அதற்கு இடமும் நேரமும் இருக்குமா? அதைப் பராமரிப்பது சாத்தியமா? இப்படிப் பல சந்தேகங்களுக்கு அவர்களிடமிருந்து “முடியும்” என்று பதில் வருகிறது. மனம் இருந்தால் எதுவும் சாத்தியம்தான் என்கிறார்கள்.
‘‘எங்க வீட்டு பால்கனித் தோட்டம் பீர்க்கங்காய், புடலை, வெள்ளரி, வெற்றிலைக் கொடின்னு விதவிதமாக இருக்கு’’ எனப் பெருமை பொங்கச் சொல்லும் லட்சுமி ஸ்ரீராம், தன் அனுபவத்தையே காய்கறித் தோட்டம் பற்றிய பாடம் ஆக்குகிறார்.
“என்னோட சொந்த ஊர் கேரளா. நான் சின்ன வயசாக இருக்கும்போது, தோட்டத்துல என் பாட்டி வளர்க்கிற கீரையை வேடிக்கை பார்க்கிறதுதான் எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு. அரைக்கீரை சாப்பிட்டா, இரும்புச் சத்து மாத்திரையே தேவையில்லைன்னு சொல்லி பாட்டி வளர்க்கிற கீரை நல்ல உயரத்துக்கு வரும். அதோட விதையை சேகரிக்க, அதை சாம்பல்ல கலந்து மறுபடியும் விதைப்பாங்க. எதுக்கு பாட்டி சாம்பல்னு கேட்டா அப்பதான் விதையை எறும்பு சாப்பிடாதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க.” அந்தப் பாட்டிதான் செடி வளர்க்கும் ஆர்வத்தை இவருக்குள் விதைத்துள்ளார்.
மேற்கொண்டுஅவரிடம்பேசிக் கொண்டிருந்ததில் காய்கறிகள் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அவரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
கோடைக் காலத்திற்கு ஏற்ற முறையில் என்னென்ன பயிரிடலாம்?
புடலங்காய், தர்ப்பூசணி, பாகற்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி.
மழைக்காலத்திற்கு?
அவரைக்காய், காராமணி, கொத்தவரங்காய்


குளிர்காலத்திற்கு?
முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கேரட், கொடமிளகாய்
மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்ப்பதற்கும், ப்ளாஸ்டிக் போன்றவற்றில் செடி, கொடி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?
மண் தொட்டியில் செடி, கொடிகளைப் பயிரிடுவதே நல்லது. தேவைக்கு அதிகமான தண்ணீரை மண்தொட்டி உறிஞ்சிக்கொள்ளும். மீதமுள்ள தண்ணீர் சிறு துளை வழியாக வெளியேறும்.

அதிகப்படியான நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் பிளாஸ்டிக் போன்ற பொருட்களுக்குக் கிடையாது. அதிகப்படியான நீர் வேரில் தங்கி, நாளடைவில் வேர் அழுகி செடி, கொடிகள் வளர்ச்சி குன்றத் தொடங்கும்.


மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்க்கத் தேவையான வழிமுறைகள் என்ன?
1 பங்கு செம்மண், 3 பங்கு ஆற்று மணல் கலந்த கலவையே செடி, கொடிகள் வளர்வதற்கு ஏற்ற மண் கலவை. விதை ஊன்றிய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இயற்கை உரங்களான ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இயற்கை உரமாகத் தூவலாம்.
மொட்டை மாடி, அடுக்குமாடிக் குடியிருப்பில் மண்தொட்டியில் தாவரம் வளர்ப்பதால் கட்டிடத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா?

ஒரு பாதிப்பும் ஏற்படாது. மண் தொட்டியில் செடி, கொடிகள் பயிரிடப்படும்போது, அதிகப்படியான நீரை மண் தொட்டி உறிஞ்சிக்கொள்ளும்.
வாடகை வீட்டில் இருந்துகொண்டு செடி வளர்ப்பதில் ஏற்பட்ட அனுபவங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள்?.
பல அனுபவங்கள் உண்டு. ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குக் குடி புகும்போது முதலில் நான் பார்க்க விரும்புவது, செடி, கொடி வளர்க்க இடம் கிடைக்குமா? என்பதுதான். வீட்டுச் சொந்தகாரரின் அனுமதி பெற்றுத்தான் காய்கறித் தோட்டம் போடுகிறேன். இராஜா அண்ணாமலைபுரத்தில் ஸ்கூல் வ்யூ தெருவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தோம். அங்கு மொட்டை மாடியில் 140 மண் தொட்டிகள் வைத்து, காய்கறித் தோட்டம் அமைத்தோம். செம்பருத்தி, ரோஜா, மல்லிகை, முட்டை கோஸ், வெற்றிலை என விதவிதமான செடி, கொடிகளை வளர்த்துவந்தோம். வீடு காலி செய்ய வேண்டும் என்கிற சூழ்நிலையில், அத்தொட்டிகளை நன்கு பராமரிக்கக்கூடிய சில நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, ஒரு சில தொட்டிகளே வைத்துக்கொள்ள முடிந்தது. மண் தொட்டிகளைப் பிரிய மனம் இடம் கொடுக்க வில்லை. அது மறக்க முடியாத அனுபவம்.
மண் தொட்டியில் செடி, கொடிகள் முழுமையான வளர்ச்சியை அடையாததற்குக் காரணம் என்ன?
நான் தினமும் எழுந்தவுடன் என் வீட்டு பால்கனி தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவேன். வெற்றிலைக் கொடியைக் கண்ணில் ஒற்றிக்கொள்வேன். பூத்துக் குலுங்கும் மல்லி, ரோஜா இதழ்களைத் தடவிக் கொடுப்பேன். பிஞ்சு விட்டுக்கொண்டிருக்கும் கத்திரி, வெண்டைக் காய்களை முத்தமிடுவேன். இவ்வாறு, நாம் நம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளைப் பேரன்புடன், பாதுகாத்துவந்தால் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட மண் கலவையில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் நம் மனம்தான் காரணம். தாவரத்திற்குத் தண்ணீர் ஊற்றிவிடுவதோடு நம் கடமை முடிந்து விடவில்லை. நம்மைப் போல தாவரத்திற்கும் உயிர், உணர்வுகள் உண்டு.


“ஏன் நீ காய்க்க மாட்டாய்?, ஏன் நீ பூக்கவில்லை?’’ எனக் கேள்வி கேட்பதை விட, அத் தாவரங்களிடம் புன்னகை செய்யுங்கள். “நீ நன்றாக வளர்வாய்!” என்று வாழ்த்துக்களைச் சொல்லிவாருங்கள். நீண்ட காலம், வளமுடன் இருக்கும். செடி, கொடிகள் நன்கு வளரும்.

இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம்

மொட்டைமாடித் தோட்டம், மழைநீரைக் குடிநீராக்கும் ஏற்பாடு, கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் எனத் தன் வீட்டுத் தேவைகளை ஆரோக்கியமான முறையில் நிறைவேற்றிக்கொள்கிறார் இந்திரகுமார்.
''நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல தண்ணீர் இந்த மூன்றும்தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. இவற்றை நம் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். முதலில் தண்ணீர். ஒரு தொட்டி அமைத்து மழை நீரைச் சேகரிக்கலாம். மழை நீரைச் சாக்கடைக்குள்விட்டு, அது கடல் நீரில் கலந்து, அப்புறம் கடல் நீரைக் குடிநீராக்கும் கூத்துக்குப் பதிலாக, முறையாக மழை நீரைச் சேகரித்தாலே தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும். மிகக் குறைந்த பரப்புள்ள மொட்டை மாடி இருந்தாலே, ஆறு ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்கலாம்.
வெட்டிவேரைத் தண்ணீர் உள்ள தொட்டிக்குள் போட்டுவைத்தால், எல்லா அசுத்தங்களும் அடங்கித் தெளிவடைந்துவிடும். அதைச் செப்புப் பாத்திரத்தில் எடுத்து தேற்றான்கொட்டைகளைப் போட்டால்,
குடிநீர் தயார். யுரேனியத்தையே சமநிலைப்படுத்தும் தன்மை உள்ள தேற்றான்கொட்டைகள் நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கின்றன. இது எல்லாம் இடவசதி குறைவான நகரத்து வீடுகளுக்குத்தான்.
இதுவே கிராமம் என்றால், ஒரு கிணறு வெட்டி மொத்த மழைநீரையும் அதற்குள் விட்டுவிடலாம். அதில் இருந்து எடுத்து செப்புப் பாத்திரத்தில் வைத்து குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்தலாம். என் வீட்டில் இப்படித்தான் செய்கிறேன்.
கேன்களில் அடைக்கப்பட்ட நீர் எத்தனை மாதங்கள் பழையது என்றுகூடத் தெரியாத நிலையில், இந்த எளிய முறையைச் சாத்தியமுள்ள எல்லோரும் செய்தால் தண்ணீர் பிரச்னையும் தீரும், நல்ல ஆரோக்கியமான நீரும் கிடைக்கும். 100 சதுர அடி மொட்டை மாடி இருந்தாலே வருடத்துக்கு 10 ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்க முடியும்.
100 அடி சுற்றளவுகொண்ட வீட்டு மொட்டைமாடியில் பாதைக்கு 5 அடி விட்டுவிட்டால் மிச்சம் 95 அடிகள் கிடைக்கும். இது சதுர அடி கணக்கில் 155 சதுர அடி வரும். சென்னைக்குள் 155 சதுர அடி நீளத்தில் நீங்கள் விவசாயம் செய்யலாம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? 800 சதுர அடி பரப்புள்ள என் வீட்டு மொட்டை மாடியில் 40 மூலிகைகள் உள்பட 150 வகையான செடிகள் இருக்கின்றன. மொட்டைமாடித் தோட்டம் என்றதும் எல்லோரும் பயப்படும் முதல் விஷயம் தண்ணீர் பிரச்னை! ஐந்து பேர்கொண்ட குடும்பத்தில் சமையல் அறையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இதை முறைப்படுத்தினாலே கழிவு நீரை மாடித் தோட்டத்துக்குப் பயன்படுத்த முடியும். மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரை ஒட்டியதுபோல ஒரு தொட்டி அமைத்து அதற்குள் மண் பரப்பி எந்தச் செடியையும் வளர்க்க முடியும். புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டும்போதே இதற்கான ஏற்பாட்டைச் செய்வது நல்லது. இதுக்கூடச் சிரமம் என்றால் மிக எளிய வழி, பானையில் செடி வளர்ப்பது. 20 சதுர அடியில் பானைத் தோட்டம் போட்டாலே, ஒரு குடும்பத் துக்குப் போதுமானது. கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, கொத்தவரங்காய், மிதி பாகற்காய், காராமணி என நம் ஊர்க் காய்கறிகள் அனைத்தும் விளையும்.

சரி, இதற்கு உரம் வேண்டும் இல்லையா?அதற்கும் எங்கும் போக வேண்டாம்.ஒவ்வொரு வீட்டிலும் நாள்தோறும்உருவாகும் மக்கும் கழிவுகளை இரண்டுபூந்தொட்டிகளில் போட்டு வந்தால்அதுவே சிறந்த உரம். அதை ஒரு கைப் பிடிஅளவு போட்டாலே, காய்கறிகள் செழித்துவளரும். குளியலறைக் கழிவு நீர்வெளியேறும் இடத்தில் கல்வாழை
சேப்பங்கிழக்கு செடிகளை வைத்தால்அந்த சோப்புத் தண்ணீர் சுத்தமாகி விடும்.இப்படி எல்லாவற்றையும் ரீ-சைக்ளிங்செய்வதுதான் இந்த முறையின்முக்கியமான அம்சம். இப்படி ரீ-சைக்ளிங்செய்ய ஆரம்பித்தால், கழிவு நீர் என்பதேஇருக்காது. கழிவு நீர் இல்லை என்றால்கொசு இருக்காது. இதை எல்லாம்செய்தால் வீட்டில் எப்போதும் குளிர்ச்சிஇருக்கும். நம் வீட்டுக் கிணற்றில் மார்கழிஅதிகாலையில் தண்ணீர் எடுத்தால் வெதுவெதுப்பாகவும், சித்திரை வெயிலில்தண்ணீர்
எடுத்தால் குளிராகவும் இருக்கும்.என்ன அர்த்தம் என்றால், தண்ணீரின்குளிர் எப்போதும் அப்படியேதான்இருக்கிறது.
வெளிப்புற வெப்பம் கூடி,இறங்கும்போது நமக்குத் தண்ணீர் குளிராகவும், வெப்பமாகவும்தெரிகிறது. மேற்சொன்ன மாடித் தோட்டத்தையும், வீட்டைச் சுற்றி உரியமரங்களும் வளர்த்தால், வீட்டின் வெப்பம் எப்போதும் குளிர்ச்சியானநிலையில் சீராக இருக்கும்!''என்கிறார் இந்திரகுமார்.Source : AV


சிட்டுக் குருவிகள் வந்துபோகும் மொட்டை மாடி தோட்டங்கள்.
வீட்டில் கார்டன் போட இடமில்லையே என்ற கவலை இப்போது பலருக்கு இருக்கிறது. இனி அந்தக் கவலையில்லை! சிட்டி மெயின் ரோடில் உங்கள் வீடு இருந்தாலும்... அதில் மொட்டை மாடி இருந்தால்போதும் மனசுக்குப் பிடிச்ச கார்டன் ரெடி!
சென்னை அசோக் நகரின் நெரிசல் மிகுந்த இடத்தில் உள்ள அந்த வீட்டின் மொட்டை மாடியில் சிட்டுக்குருவிகள் ‘கீச் கீச்’ சப்தமிட்டபடி நம்மை வரவேற்றன... அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பிஸினஸ் டைரக்டராக இருக்கும் கண்ணன்!

‘‘எங்க வீடு மெயின்ரோட்டை ஒட்டி இருப்பதால் எப்போதும் பொலியூஷன், தேவையில்லாத சத்தம்... வீட்டிற்கு வந்தால் அமைதியே இல்லியேன்னு ரொம்ப கவலைப்பட்டேன். அப்புறமாத்தான் மொட்டை மாடியில் கார்டன் வைக்கணும்னு தோணுச்சு. செடி, கொடின்னு இருந்தால்தான் பறவைகள் வரும்னு நினைச்சேன்... இப்போ என் டெரஸ் கார்டன் நினைச்சமாதிரி அமைஞ்சிருக்கு... நிறைய குருவிகள் வருது... காலை நேரத்திலேயும் மாலையும் அதுங்களோட சத்தம் இனிமையா இருக்கு. அப்பாவுக்குத் தோட்ட வேலைன்னா ரொம்பப் பிடிக்கும். அவருக்கும், அம்மாவுக்கும்கூட இந்த கார்டன் ரிலாக்ஸ் தர்ற இடமா இருக்கறதில் எனக்கு ரொம்ப திருப்தி, சந்தோஷம்!’’ என்கிறார்.

மொட்டைமாடியில் கார்டனா? பேஸ்மெண்ட்  ஸ்ட்ராங்க்தான், பில்டிங் வீக் ஆகிவிடாதா என்கிறீர்களா? ‘மொட்டைமாடியில் முறைப்படி கார்டன் அமைத்தால், பில்டிங்கிற்கு எந்த சேதாரமும் ஆகாது’ என்கிறார், லேண்ட்ஸ்கேப் நிபுணர் ஆண்டனிராஜ்.

எதைச் செய்ய வேண்டும்? எது கூடாது?

‘‘டெரஸ் கார்டன் அமைக்கும் முன் சில விஷயங்களை கவனத்தில் வைப்பது அவசியம். முதலில் மொட்டை மாடியில் தண்ணீர் எந்தப் பக்கம் நோக்கிப் போகிறது என்பதைப் பார்த்து, அதற்கு எதிர்பக்க இடத்தை கார்டன் போட தேர்ந்தெடுங்கள். அந்தப் பகுதியில் கார்டன் ஸ்கெட்ச் போட்டு, அரை அடி உயரத்திற்கு கார்டன் தரையை உயர்த்திக்காட்ட தடுப்புச் சுவர் கட்டுங்கள். இந்த தடுப்புச் சுவரின் நடுவில் கார்டன் நீர்வடிய துவாரங்கள் இருக்க வேண்டும்.  அதன்மேல் ஜியோ டெக்ஸ்டைல் மேட்டுடன் லைட் வெயிட் மண் கலந்து போட வேண்டும். இந்தக் கலவை 5 கிலோ எடை மண் தேவைப்படும் இடத்தில் மண்ணை 2 கிலோவாக குறைக்கக்கூடியது. இதன்மேல் புல்தரை அமைத்து, அங்கங்கே தொட்டிகள் வைத்து, வழித்தடங்கள் அமைத்துவிட்டால் கார்டன் ரெடி.

மழை பெய்தாலும், தண்ணீர் அதிகமாகிவிட்டாலும், வாட்டர் ப்ரூஃப் வழியே நீர் வடிந்துவிடும். மொட்டை மாடித் தரைக்கு எந்த டேமேஜும் வராது’’ என்கிறார் ஆண்டனிராஜ்.

அப்புறமென்ன... உங்கள் வீட்டு மொட்டை மாடியிலும் பச்சைப் பசேல் தோட்டம் போடவேண்டியதுதானே

ரசாயன உரமில்லாமல் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறிகள்
புதுச்சேரி, ஏப்ரல் 3: ரசாயன உரமில்லாமல் இயற்கை உரமிட்டு வீட்டின் மொட்டை மாடியில் காய்கறிகள் வளர்த்து வரும் தம்பதியினர். அவ்வாறு விளையும் காய்கறிகளை மட்டுமே சமைத்துச் சாப்பிட்டு வருவதாக கூறுகின்றனர்.




புதுச்சேரி பாரதி வீதியைச் சேர்ந்தவர் பிரடெரிக் (வயது 63). இவர் புதுச்சேரி உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் முதுநிலை மருந்து ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவி செங்கோல் மேரி (வயது 63). இவர் புதுச்சேரி மகப்பேறு மருத்துவமனையில் தலைமைச் செவிலியராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்றுள்ளார்.
இவர்களது வீட்டின் இரண்டாவது மொட்டை மாடி முழுவதும்  தொட்டிகளில் பல்வேறு செடிகளும், மரங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றது. தற்போது இவர்களது மாடி தோட்டத்தில் உள்ள வாழைக் குலை தள்ளியுள்ளது. இதனைப் பார்ப்பவர்கள் மிகவும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

இரண்டாவது மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகள் பயிரிட்டு வருவது பற்றி செங்கோல் மேரி கூறியதாவது:
எனது கணவர் பிரெடரிக் ஒரு நாள் ரசாயண உரமில்லாமல், இயற்கை உரத்தில் வளர்க்கப்படும் செடிகளில் இருந்து காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து கணவரின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக கடந்த முயற்சித்து மாடியில் தொட்டிகளில் தக்காளி, வெண்டை, கத்தரிக்காய்,  பீன்ஸ், கொத்தவரங்காய் போன்ற செடிகளையும், கொடிகளில் வளரக்கூடிய பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவைகளையும் வளர்த்தேன்.
இதனை கடந்த 2000ம் ஆண்டில் இருந்து செய்து வருகின்றேன். அப்போது முதல் பெரும்பாலும் வீட்டில் வளர்க்கப்படும் செடிகளில் இருந்து பறிக்கப்படும் காய்கறிகளையே சமைத்துச் சாப்பிட்டு வருகின்றோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வீட்டின் மெத்தையில் தோட்டம் வைத்திருப்பதைப் பார்த்த மதுரையில் உள்ள எங்களது நண்பர் ஒருவர் வாழைக்கன்று ஒன்றை கொடுத்தார். அந்த வாழைமரம்தான் தற்போது ஐந்தாவது முறையாக குளை தள்ளியுள்ளது.
மேலும் பப்பாளி மரத்தையும் வளர்த்து வருகின்றோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேசிக்கில் வாங்கிய மாமரக்கன்று ஒன்றை தொட்டியில் வளர்த்தோம். அம்மாமரம் ஒரு ஆண்டிலேயே சிறந்த முறையில் கனிகளைக் கொடுத்தது.
அதன்பின்னர் நாங்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் தொட்டியை உடைத்துக் கொண்டு மாமரத்தின் வேர் வந்ததால், அம்மாமரத்தை உறவினர் ஒருவருக்கு கொடுத்து விட்டோம்.
எங்கள் வீட்டு தோட்டத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகின்றோம். ரசாயண உரங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. பூச்சி மருந்தாக சாண சாம்பலை மட்டுமே தூவுவோம். மற்றபடி எந்தவிதத்திலும் ரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லி மருந்தையோ பயன்படுத்துவதில்லை.
இந்த தோட்டம் எங்களுக்கு மிகந்த சந்தோஷத்தை தருகின்றது. மெத்தை எத்தனையாவது மாடியாக இருந்தாலும் நாம் நினைத்தால் தோட்டத்தை அமைத்து, பயிரிட்டு  காய்கறிகளைப் பறித்து சந்தோஷமாக வாழலாம். இந்த தோட்டம் வீட்டை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...
திரு சுல்தான் அவர்களே,
மாடியில் காய்கறி பயிரிட நீங்கள் மண் அல்லது சிமெண்ட் தொட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது. மண்ணின் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக எடை குறைந்த மண்புழு உரம் அல்லது மக்கிய தேங்காய்நார் கம்போஸ்ட்டை பயன்படுத்துங்கள். இவை மண் இருகுவதைக் குறைப்பதோடு, தொட்டிகளை எளிதில் இடம் மாற்றவும் உதவும். நீங்கள் குறிப்பிட்டுள்ள 600 சதுர அடியில், தினசரி உபயோகிக்கும் புதினா, கொத்தமல்லி,தண்டுக்கீரை, சிறுகீரை,தக்காளி, கத்தரி, மிளகாய், சிறுவெங்காயம்,பொன்னாங்கன்னி, பாலக், முள்ளங்கி போன்றவற்றைபயிர் செய்யுங்கள். அருகிலுள்ள அக்ரோ-ஸ்டோர்களில் இவற்றின் விதைகள் சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும். இவற்றை எப்படி விதைப்பது, பாதுகாப்பது போன்ற அனைத்து விவரங்களும், இந்த வலைதளத்தின் வேளாண்மை பகுதியில் (பண்ணை சார்ந்த தொழில்கள்-வீட்டுக்காய்கறி தோட்டம்) விவரமாக கிடைக்கும்.அல்லது- இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/i2020201a-ea3153ep-abia32020i2039

திரு சுல்தான் அவர்களே, தயவுசெய்து உங்கள் ஊர் பெயரை குறிப்பிட்டு எழுதவும்.

முனைவர் கதிரேசன்,
வேளாண்மை, இண்.டி.ஜி.
இணைய தளங்களிலிருந்து

Friday, April 27, 2012

வேளச்சேரியில் சுகாதார அச்சுறுத்தல்

வேளச்சேரிக்கும் பெருங்குடிக்கும் இடையில் கொடுங்கையூர் போலவே ஒரு பெரிய பகுதியில் பல வருடங்களாக  குப்பை கொட்டி அதை தினமும் எரிக்கின்றனர். அதிலிருந்து வெளிப்படும் புகை வேளச்சேரியில் பெரும்பாலான மக்கள் வசிக்கும் டான்சி நகர், பேபி நகர், வி.ஜி.பி. செல்வா நகர், விஜய நகரம், தண்டீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை நிறைக்கின்றன. அந்த புகையால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற வெளிப்படையாக தெரியும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.. பிப்ரவரி 2010 ல் குப்பைகளை எரிக்கக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்தாக படித்துள்ளேன். வளர்ந்து வரும் புறநகரங்களில் இது போன்ற சுகாதார அச்சுறுத்தல் இருந்தால் எப்படி வாழ்வது?