Thursday, April 9, 2009

ஆட்டோக்களின் அடாவடி


சென்னையில் பீக் ஹவர்ஸ்ல ஆட்டோல போகனும்னா சம்பளத்தையே கேட்கும் ஓட்டுனர்கள்:

இன்று காலை வாழை(www.vazhai.org) சம்பந்தமான வேலைக்காக பாண்டிபஜார் போகும் பொருட்டு என் அறையிலிருந்து கிளம்பி அருகிலுள்ள கிண்டி பேருந்து நிலையம் வந்துகொண்டிருந்தேன். நேரமின்மையால் என்னை கடந்து சென்ற ஆட்டோவை நிறுத்தி பாண்டிபஜார் போகனும் எவ்வளவு ஆகும் என கேட்டேன் அறுபது கொடுக்கும் மனநிலையில், அவன் 120 கேட்டான். பேசாம நடையைக்கட்ட போகும் வழியில் இருந்த ஆட்டோ ஸ்டேண்டில் விசாரித்தேன்..

"எங்க சார் போனும்..?"

"பாண்டிபஜார்"

"பாண்டிபஜார்ல..??"

"ஹிந்து பிரசார சபா கிட்ட..எவ்வளவு ஆகும்?"

"நூத்தம்பது ஆவுமே சார்.."

அடப்பாவிகளா!!! அதிகபட்சம் மூனு கிலோமீட்டர் கூட ஆகாதேனு நொந்து பத்தடி தாண்டியிருப்பேன். ஏதோ ஒரு நம்பிக்கை... ஒரு ஆட்டோ ஓட்டும் மனுசனை பாத்துரமாட்டோமா என்று. 70 ரூபாய் கேட்டான் அவன். 150.00, 70.00 ரெண்டுமடங்கு வித்தியாசம் வெரும் பத்தடியில்.

No comments: