http://www.revalgo.com/blog/shimoga-cancer-cure-vaidya-narayana-murthys-herbal-cancer-treatment/
Shimoga Cancer Cure
Shimoga Cancer Cure
சிமரூபா கஷாயம் - புற்று நோய்க்கு மருந்து.
மிக உபயோகமான ஒன்று யாராவது ஒரிவருக்காவது உபயோமாகலாம். தொலைபேசி எண்ணும் தரப் பட்டுள்ளதால் குறிப்பிட்ட நபரை எளிதில் தொடர்பு கொள்ளவும் முடியுமே... இனி படித்த விஷயம் கீழே.
நீர், நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவை மாசு பட்டுள்ளதால் பல்வேறு உடல்குறைகள் ஏற்படுகின்றன. புற்று நோயின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் காசர்க்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் என்டோசஃல்பான் அதிக அளவு காணப்படுகிறது. எனவே புற்று நோய் அதிக அளவில் பரவியது. இப்போது கேரளாவில் என்டோசல்பான் தடை செய்யப் பட்டுள்ளது. தேசிய அளவிலும் இந்த விஷயத்தில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, என்டோசல்ஃபானை உற்பத்தி செய்யக் கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்ச்சி வலுத்துள்ளது.
இந்நிலையில் சிமரூபா கிளாக்கா (SIMAROUBA GLAUCA) இலைக் கஷாயத்தைத் தொடர்ந்து பருகி வந்தால் புற்று நோய் தணிகிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் சிமரூபா மரங்கள் பரவலாக உள்ளன. இதற்கு சொர்க்க விருட்சம், லக்ஷ்மிதரு என்கிற பெயர்களும் உள்ளன.
கேரளாவைச் சேர்ந்த புற்று நோயாளிகள் பலருக்கு சிமரூபா கஷாயத்தை பெங்களுருவைச் சேர்ந்த தம்பதியர் ஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி கொடுத்தனர். இருவரும் வேளாண் விஞ்ஞானிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்தக் கஷாயத்துக்காக அவர்கள் காசு பெற்றுக் கொள்வதில்லை. சேவையாகச் செய்து வருகிறார்கள்.
'சிமரூபா வளர்ப்பது கடினமானதல்ல. இதை மிகச் சுலபமாக வளர்க்க முடியும். இந்த மரத்தை வீட்டுக் கொல்லையில் கூட வளர்க்கலாம். இந்த விருட்சம் வீட்டில் இருந்தால் அது ஆரோக்கியக் காப்பீட்டுக்குச் சமமாகும்' என்று ஷியாம் சுந்தர் ஜோஷி கூறுகிறார். அவரை 080-23335813 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிமரூபாவில் 'கோசினாய்ட்ஸ்' என்ற நுண்சத்து உள்ளது. இதுதான் புற்று நோய்க்கு எதிராகச் செயல் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. ரத்தப் புற்று நோய்க்குக் கூட இது அருமருந்தாகும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கையை உதாரணமாகக் கொள்வதைப் போல ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம் கேரளாவில் திருவனந்தபுரம் வழுதைக்காடுப் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். புற்று நோய் முற்றிய நிலையில் வாழ்வு எப்போது முடியுமோ என்ற கவலையில் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் ஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி தம்பதியர் அளித்துவரும் சிமரூபா கஷாயத்தைப் பற்றி ராமதாசும் அவரது மனைவி ஷீலாவும் கேள்விப் பட்டனர். சிமரூபா கஷாயத்தைத் தொடர்ந்து பருகியதையடுத்து ராமதாசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. இப்போது அவர் ஏறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.
கீமோதெரபி மற்றும் அலோபதி மருந்துகளும் புற்று நோயின் பாதிப்பைத் தணிக்க உதவின என்ற போதிலும் சிமரூபா கஷாயத்தின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது என்று ராமதாசும் ஷீலாவும் ஒருமித்த குரலில் சொல்கின்றனர் .
புற்று நோயாளிகளுக்கு சிமரூபா கஷாயம் வரப்பிரசாதம். இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு, மத்திய அமெரிக்கா. இது ஒருவகை எண்ணெய் மரம். இந்த மரத்திலிருந்து எடுக்கப் படுகின்ற உணவு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதை சமையல் எண்ணையாகப் பயன்படுத்தினால் நோய் குணம் அடைகிறது என்று பயனாளிகள் கருதுகின்றனர்.
நீர், நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவை மாசு பட்டுள்ளதால் பல்வேறு உடல்குறைகள் ஏற்படுகின்றன. புற்று நோயின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் காசர்க்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் என்டோசஃல்பான் அதிக அளவு காணப்படுகிறது. எனவே புற்று நோய் அதிக அளவில் பரவியது. இப்போது கேரளாவில் என்டோசல்பான் தடை செய்யப் பட்டுள்ளது. தேசிய அளவிலும் இந்த விஷயத்தில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, என்டோசல்ஃபானை உற்பத்தி செய்யக் கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்ச்சி வலுத்துள்ளது.
இந்நிலையில் சிமரூபா கிளாக்கா (SIMAROUBA GLAUCA) இலைக் கஷாயத்தைத் தொடர்ந்து பருகி வந்தால் புற்று நோய் தணிகிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் சிமரூபா மரங்கள் பரவலாக உள்ளன. இதற்கு சொர்க்க விருட்சம், லக்ஷ்மிதரு என்கிற பெயர்களும் உள்ளன.
கேரளாவைச் சேர்ந்த புற்று நோயாளிகள் பலருக்கு சிமரூபா கஷாயத்தை பெங்களுருவைச் சேர்ந்த தம்பதியர் ஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி கொடுத்தனர். இருவரும் வேளாண் விஞ்ஞானிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்தக் கஷாயத்துக்காக அவர்கள் காசு பெற்றுக் கொள்வதில்லை. சேவையாகச் செய்து வருகிறார்கள்.
'சிமரூபா வளர்ப்பது கடினமானதல்ல. இதை மிகச் சுலபமாக வளர்க்க முடியும். இந்த மரத்தை வீட்டுக் கொல்லையில் கூட வளர்க்கலாம். இந்த விருட்சம் வீட்டில் இருந்தால் அது ஆரோக்கியக் காப்பீட்டுக்குச் சமமாகும்' என்று ஷியாம் சுந்தர் ஜோஷி கூறுகிறார். அவரை 080-23335813 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிமரூபாவில் 'கோசினாய்ட்ஸ்' என்ற நுண்சத்து உள்ளது. இதுதான் புற்று நோய்க்கு எதிராகச் செயல் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. ரத்தப் புற்று நோய்க்குக் கூட இது அருமருந்தாகும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கையை உதாரணமாகக் கொள்வதைப் போல ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம் கேரளாவில் திருவனந்தபுரம் வழுதைக்காடுப் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். புற்று நோய் முற்றிய நிலையில் வாழ்வு எப்போது முடியுமோ என்ற கவலையில் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் ஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி தம்பதியர் அளித்துவரும் சிமரூபா கஷாயத்தைப் பற்றி ராமதாசும் அவரது மனைவி ஷீலாவும் கேள்விப் பட்டனர். சிமரூபா கஷாயத்தைத் தொடர்ந்து பருகியதையடுத்து ராமதாசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. இப்போது அவர் ஏறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.
கீமோதெரபி மற்றும் அலோபதி மருந்துகளும் புற்று நோயின் பாதிப்பைத் தணிக்க உதவின என்ற போதிலும் சிமரூபா கஷாயத்தின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது என்று ராமதாசும் ஷீலாவும் ஒருமித்த குரலில் சொல்கின்றனர் .
புற்று நோயாளிகளுக்கு சிமரூபா கஷாயம் வரப்பிரசாதம். இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு, மத்திய அமெரிக்கா. இது ஒருவகை எண்ணெய் மரம். இந்த மரத்திலிருந்து எடுக்கப் படுகின்ற உணவு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதை சமையல் எண்ணையாகப் பயன்படுத்தினால் நோய் குணம் அடைகிறது என்று பயனாளிகள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment